Wednesday, April 23, 2014

நான் சொன்ன ஆருடம் உண்மையாகி விட்டது

தலைப்பைப் பார்த்தவுடனே, இவன் எப்பத்திலிருந்து ஜோசியம் சொல்ல ஆரம்பித்துவிட்டான் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. அது வேற ஒண்ணும் இல்லைங்க, இயக்குனர் விஜய் மற்றும் அமலாபால் பற்றிய செய்தியை தாங்க சொல்றேன்.



இந்த பதிவுல நான் -  கதாநாயகிக்கு இயக்குனரின் மேல் உள்ள பாசம் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது

இயக்குனர் விஜய்யின் மீது அமலாபாலுக்கிருந்த பாசத்தை சொல்லியிருந்தேன். நம்ம நண்பர்கள் கூட "கிசு கிசுவைக்கூட உண்மை ஆக்கிட்டீங்க போலன்னு சொல்லியிருந்தாங்க. கடைசியில அது உண்மையாகவே ஆகி விட்டது.

இரண்டு நாட்களுக்கு முன், இயக்குனர் விஜய்யும், அமாலாபாலும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் தங்களுக்கு ஜூன் 7ஆம் தேதி கொச்சியில் நிச்சயதார்த்தம் என்றும் , ஜூன் 12ஆம் தேதி சென்னையில் திருமணம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

நான் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை, இவர்களை பற்றி வந்த கிசுகிசு எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த ஐந்து நாட்களும் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது, சரி இது உண்மையாகத்தான் இருக்கும் என்று நினைக்கத் தோன்றியது.  இப்போது இவர்களின் அறிக்கை மூலம் அது கிசு கிசு இல்லை, உண்மை தான் என்று தெரிந்துவிட்டது.

சரி, யார் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளட்டும், அதைப் பற்றி ஒரு பதிவு தேவையா என்று எனக்கே தோன்றியது. இருந்தாலும் நான் ஊகமாக சொன்ன ஒரு செய்தி உண்மையாகிவிட்டதை தெரிவிக்க வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் தான் இந்த பதிவை எழுதினேன்.


18 comments:

  1. //நான் ஊகமாகவா ? ஊடகமாகவா?/
    but சகோ நானும் இதைதான் நினைத்தேன்!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ. திருத்தி விட்டேன் .
      அட!பரவாயில்லை, நீங்களும் நினைத்திருக்கிறீர்களே!!!

      Delete
  2. நீங்களும் ஜோசியர் ஆகிட்டீங்க போல! ஹாஹாஹா! நன்றி!

    ReplyDelete
  3. அரசியலிலும், சினிமாவிலும் எது வேணுமானாலும் நடக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வது மிக சரி சகோ.

      Delete
  4. Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி.

      Delete
  5. அடடா இதை வைத்துக்கொண்டு ஜோசியர் ஆகப் போறீங்களா அப்போ எழுதுவதை விட்டு விடப் போகிறீர்களா. எதற்கும் கொஞ்சம் யோசித்து செய்யுங்கள்...

    ReplyDelete
  6. அப்படியெல்லாம் இல்லை சகோ. எனக்கும் ஜோசியத்துக்கும் ரொம்ப தூரம். அதனால நான் ஜோசியராக எல்லாம் போக மாட்டேன்.

    ReplyDelete
  7. அப்டியே அடுத்த பிரதமர் யாருன்னும் சொல்லீருங்களே :)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, இந்த விளையாட்டுக்கு நான் வரலை சாமி.

      Delete
  8. நடக்கட்டும் நடக்கட்டும்.... சினிமாவுல இதெல்லாம் சாதாரணமப்பா என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்..

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னிங்க ஸ்பை

      Delete
  9. ஆஹா.... அடுத்த ஜோசியர் ரெடி....

    எனக்கு மட்டும் ரகசியமா அடுத்த இந்தியப் பிரதமர் யாருன்னு ஜோசியம் சொல்லுங்களேன்! :)

    ReplyDelete
    Replies
    1. இந்த விளையாட்டுக்கு நான் வரலை சாமி.
      (ஆமா, அதென்ன உங்களுக்கு மட்டும் ரகசியமா!!!!!)

      Delete
  10. நடிக நடிகையரின் திருமணம் மட்டுமே ஏன் இவ்வளவு முக்கயம் தந்து பார்க்கப்படுகிறது இச்சமூகத்தால்?

    ReplyDelete
    Replies
    1. அவர்களின் திருமணம் மற்றவர்களுக்கு ஒரு சுவராசியமான விஷயமாகி போனதால் தான்.

      Delete