Wednesday, October 9, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – உணவகத்தில் சாப்பிடும் காட்சி – தொடர்ச்சி


இன்னொரு உதவி இயக்குனர் ராகேஷ் வந்து, இந்த காட்சியோட “continuity” காட்சி எடுக்கணும். அது நாளைக்கோ இல்லை நாளை மறு நாளோ இருக்கும். அதனால எல்லோரும் இதே காஸ்ட்யூம்ல வந்துடுங்கன்னு சொன்னாரு. எப்படியோ முத நாள் சூட்டிங் ஒரு வழியா முடிஞ்சுது. நானும் எங்க வீட்டு ஆளுங்களையெல்லாம் கூட்டிக்கிட்டு வீடு வந்து சேர்ந்தேன். அன்றைக்கு இரவு, எனக்கு போன் மேல போன், சூட்டிங் எப்படி போச்சு, விஜய்,அமலாபால் கூட எல்லாம் நடிச்சீங்களா, நீங்க எப்படி நடிச்சீங்கன்னு ஒரே விசாரிப்பு தான். ஆஹா, இந்த துண்டு துக்கடா கதாப்பாத்திரத்தில நடிச்சதுக்கே இவ்வளவு போனான்னு ரொம்பவும் சந்தோஷமா இருந்துச்சு.  யார், யார் கிட்டேருந்தோ போன் வருது, ஆனா வர வேண்டிய படக்குழுவினரிடமிருந்து போனே வரலை. அப்புறம் 10 மணி போல, நாளை மறு நாள் அதாவது திங்கட்கிழமை காலைல சரியா 7.30 மணிக்கு அந்த உணவகத்துலேயே சூட்டிங்ன்னு sms வந்துச்சு. இங்க அந்த சமயத்துல ஈஸ்டர் விடுமுறை (வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை), அதனால ஆபிஸுக்கு லீவு போட வேண்டாம்னு ஒரு நிம்மதி.  

திங்கட்கிழமை, நாங்க எல்லாம் வரலைன்னு வீட்டு அம்மணி சொல்லிட்டாங்க. அதனால நான் மட்டும் 7 மணிக்கு வீட்டை வீட்டு கிளம்பி, 7.45 மணிக்கு அந்த உணவகத்துக்கு போனேன். சனிக்கிழமை கொண்டு போன காஸ்ட்யூம்(!) பேக்கை கார்லேருந்து எடுக்கவேயில்லை. (அந்த பேக் சூட்டிங் முடியுற வரைக்கும் கார்லேயே தான் இருந்துச்சு.). அங்க பார்த்தா, ரெண்டு பேர் மட்டும் சரியா 7.30 மணிக்கு வந்து காத்துக்கிட்டு இருந்தாங்க. அப்புறம் கொஞ்ச நேரத்துல மற்ற நண்பர்கள் எல்லாம் வந்து சேர்ந்துட்டாங்க 8.30 மணிக்கு தான் படக்குழுவினரோட பஸ் வந்துச்சு. பஸ்லேருந்து, இயக்குனர், உதவி இயக்குனர்கள், மத்தவங்கன்னு எல்லோரும் இறங்கினாங்க. 10 நிமிஷத்துக்குள்ள, அந்த உணவகத்துக்கு பின்னாடி இருக்கிற இடத்துல சாப்பாடு கடையை திறந்துட்டாங்க. எங்களையும் நீங்களும் வந்து சாப்பிடுங்கன்னு சொன்னாங்க. நாங்களும் பின்னாடி போய், வரிசையில நின்னு, இட்லி, வடை, பொங்கல், சாம்பாருன்னு, ஒரு கட்டு கட்ட ஆரம்பிச்சோம். நான் அன்னைக்கு தான் ரொம்ப, ரொம்ப நாளைக்கு அப்புறம் காலைல, விதவிதமா சாப்பிட்டேன். கூட ஒரு ரெண்டுஇட்லியும், இன்னும் கொஞ்ச பொங்களையும் சாப்பிட்டு இருப்பேன், ஆனா, அதுக்குள்ள பயம் வந்துடுச்சு, எங்க, நல்லா சாப்பிட்டுட்டு, வந்த வேலையை பார்க்காம, தூக்கம் வந்துடுச்சுன்னா, என்ன பன்றதுன்னு, அதனால கொஞ்சம் அளவோடு தான் சாப்பிட்டேன். அப்ப தான் ரெண்டு மூணு பேர் பேசிக்கிட்டது காதுல விழுந்துச்சு. என்னன்னா, டான்ஸ் பாய்ஸ்ல இருக்கிற ஒரு மூணு பேர் அவுங்க தங்கியிருக்கிற அறைக்குள்ளேயே, தம் அடிச்சிருக்காங்க. அது கடைசில அபராதம் கட்டுகிற அளவுக்கு போயிடுச்சு. நாங்களும் யாருங்க அது அப்படின்னு ஒருத்தர் கிட்ட கேட்டோம், அவரும் கொஞ்சம் தள்ளி நின்னுக்கிட்டு இருந்த ஒரு ரெண்டு பேரை காமிச்சு, “நான், அவனுங்க கிட்ட ரூமுக்குள்ள தம் அடிக்காதீங்கடா, ஏதாவது பிரச்சனையாகிட போகுதுன்னு சொன்னேன், கேக்க மாட்டேன்னுட்டாணுங்க”, அப்படின்னாரு. எங்களுக்கு கொஞ்சம் தள்ளி, பழைய நடிகர் “சுரேஷ்” உட்கார்ந்து மேக்கப் போட்டுக்கிட்டு இருந்தாரு. மொட்டை தலையை மறைச்சு, நல்லா விக் எல்லாம் வச்சுக்கிட்டு இருந்தாரு. எங்களுக்கு டிபன் பரிமாறினவரு, அவரு கிட்ட, சுரேஷ் சார் சாப்பிட வாங்கன்னு கூப்பிட்டாரு, உடனே மேக்கப் போட்டுக்கிட்டு இருந்த சுரேஷும், இதோ வரேன்னேன்னு சொல்லிக்கிட்டு அங்கேருந்து எந்திரிச்சாரு. உடனே, “காக்காயிக்கு முக்குல வேர்க்கிற” மாதிரி, உள்ளேயிருந்து வெளியே வந்த இயக்குனர், சுரேஷிடம், “சார், நீங்க உள்ள வந்து சாப்பிடுங்கன்னு” உள்ள கூட்டிக்கிட்டு போயிட்டாரு. அப்புறம் நாங்க சாப்பிட்டு முடிச்சு 9.30 மணிக்கு, எங்களோட continuity ஷாட் எடுக்க ஆரம்பிச்சாங்க. அங்க விஜய் இல்லை,சந்தானம் இல்லை, அமலாபால் இல்லை, நாங்களும் அந்த டான்ஸ் பாய்ஸ் மட்டும் தான் உள்ளுக்குள்ள இருந்தோம். அமாலாபாலுக்கு பதில், அந்த பல்லவி(காஸ்ட்யூம் டிசைனர்) அவுங்க அமலாபால் போட்டிருந்த அதே காஸ்ட்யூம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. என்னடா இவுங்க இருக்காங்களேன்னு பார்த்தா, அவுங்க அமாலாபாலுக்கு டூப்பாம். நாங்க திருப்பியும்,”மஞ்ச கலரு ஜிங்குச்சா, பச்சை கலரு ஜிங்குச்சா, சிகப்பு கலரு ஜிங்குச்சான்னு” கத்த ஆரம்பிச்சோம். எங்களை குளோசப் ஷாட் எல்லாம் எடுத்தாங்க. ஒரு வழியா 11 மணியை போல, அந்த காட்சியை எடுத்து முடிச்சாங்க. நாங்களும் அந்த ரூம் விட்டு வெளியே வந்தோம். அன்றைக்கும் அந்த உணவகத்துல சூட்டிங் பார்க்கிறதுக்காக கூட்டம் வந்து இருந்துச்சு. எல்லோரும் எங்களை என்ன சீன் எடுத்தாங்க, விஜய் உள்ள இருக்காரா,அமலாபால் இருக்காங்களான்னு” கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. 10 நிமிஷத்துக்குள்ளேயே, கிருஷ்ணன், எங்களிடம் வந்து “இன்னைக்கு அவ்வளவு தான், இன்னும் பத்து நாள் கழிச்சு கூப்பிடுறோம்” அப்படின்னாரு. நாங்க உடனே பத்து நாள் கழிச்சா, அப்படின்னு கேட்டோம், அதற்கு அவர், “சந்தானம் நாளைக்கு இந்தியா போறாரு, அவர் திரும்பி வந்ததுக்கு அப்புறம் தான் உங்களோட காட்சியை எடுக்க முடியும். நீங்க இன்னும் ரெண்டு நாளைக்கு வர வேண்டியதாக இருக்கும்ன்னு சொன்னாரு.

கடைசில  ரெண்டு நாள் எல்லாம் நாங்க போகலை, நாலு நாள் போனோம். அதுல ரெண்டு நாள் எங்களை வர சொல்லி, மூணு மணி நேரம் காக்க வச்சுட்டு, எங்க காட்சியை எடுக்காமலே, திரும்பி போக சொன்னாங்க. அதை பற்றியெல்லாம் அடுத்த பதிவுல சொல்றேன்.   

தலைவா திரைப்பட அனுபவம் – படப்பிடிப்பிற்கு வந்து காத்திருந்து திரும்பி சென்றது

-    இன்னும் சொல்கிறேன்


No comments:

Post a Comment