Wednesday, October 23, 2013

கணவன் மனைவியிடம் மிக முக்கியமாக எதிர்ப்பார்ப்பது - தொடர்ச்சி

சென்ற வருட ஆரம்பத்தில் “கணவன் மனைவியிடம் மிக முக்கியமாக எதிர்ப்பார்ப்பது” என்ற ஒரு பதிவை பதித்திருந்தேன் -

கணவன் மனைவியிடம் மிக முக்கியமாக எதிர்ப்பார்ப்பது 

அதனோட தொடர்ச்சியாக இந்த பதிவை பதிகிறேன். வேலை வெட்டி இல்லாதவங்க, மனைவி எப்படியெல்லாம் இருந்தால் கணவனின் நெஞ்சில் நீங்க இடம்பிடிக்க முடியும்னு சொல்லியிருக்காங்க. அதை நானும் வேற வேலை இல்லாம படிச்சு(!) இங்க பதிவு செய்திருக்கிறேன்.

1. பேச்சை குறையுங்கள்:  கணவன்மார்கள் கூறும் பெரிய புகார் இது தான். என் மனைவி வாயைத் திறந்தா பேசிக்கிட்டே இருப்பாள் என்பது தான். அதனால் தேவையில்லாத பேச்சைக் குறைப்பது நல்லது பெண்களே

2. ஷாப்பிங்:  ஷாப்பிங் என்ற வார்த்தையைக் கேட்டாலே பல கணவன்மார்கள்  தெறித்து ஓடுகிறார்கள். காரணம் கடை
,  கடையாக ஏறி இறங்க வேண்டுமே. பெண்களே ஷாப்பிங் போகும் போது சக பெண்களுடன் செல்லுங்கள் இல்லை என்றால் கணவரை அழைத்துச் சென்றால் அவரை அலைக்கழிக்காதீர்கள்.

3. சீரியல் மோகம் டிவி சீரியலே கதி என்று கிடக்காதீர்கள். சீரியல் விளம்பரத்திற்கு நடுவே கணவனுக்கு சாப்பாடு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் சீரியலை பார்த்து அழுவது கணவன்களுக்கு எவ்வளவு எரிச்சலூட்டும் விஷயம் என்று தெரியுமா
?

4. புரணி வேண்டாமே கணவரிடம் பிற பெண்களைப் பற்றியும்
, அவர்கள் வீட்டில் நடப்பவை பற்றியும் புரணி பேசாதீர்கள். ஆண்களுக்கு பிடிக்காத விஷயம் இந்த புரணி.
5. நண்பர்களுடன் கணவன்மார்களை அவர்களின் நண்பர்களுடன் நேரம் செலிவட அனுமதியுங்கள். நான் ஒருத்தி வீட்டில் இருக்கேன் என்ன நீங்க நண்பர்களோட வெளியே போகிறது என்று கேட்காதீர்கள்.


பின் குறிப்பு: பத்திரிக்கையில் படித்ததை தான் நான் இதில் பதித்திருக்கிறேன். என்னோட சொந்த கற்பனை இல்லை என்பதை இங்கே தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.(எல்லாம் ஒரு தற்காப்புக்காகத் தான்)

கண்டிப்பாக அடுத்த பதிவு திரைப்பட அனுபவ பதிவு தான்.

No comments:

Post a Comment