Saturday, April 7, 2012

தமிழகத்தில் இப்படியும் ஒரு எம்‌.எல்.‌ஏ இருந்திருக்கிறார்

சென்ற வாரம் தமிழகத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்‌.எல்.‌ஏ  திரு. முத்துக்குமரன் மரணமடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவரான இவர், கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். சாதாரணமா, தேர்தல்ல நின்னு ஜெயிக்கிறதுக்கு, பணபலம் ஒரு மிகப் பெரிய முக்கிய கருவியா விளங்கும். ஆனா எந்த விதமான பணபலமும், அரசியல் பலமும் இல்லாம, எளிமையும், தூய்மையும் வச்சுக்கிட்டு தேர்தல்ல ஜெயிக்க முடியுங்குறதுக்கு இவர் ஒரு உதாரணம். ஒரு கொடுமை என்னன்னா, தன் தொகுதிக்குட்பட்ட ஒரு ஊரில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு போனவருக்கு, அந்த இடத்துலேயே அவரோட துக்க நிகழ்ச்சியும் நடந்தது தான்.
எம்.எல்.ஏ ஆனா பிறகும் கூட, அவரிடம்  சொந்த வண்டி இல்லாம இருந்ததை பார்த்த அவர் ஊர் மக்கள், நல்ல மனசோடு தங்கள் கைக் காசைப் போட்டு அவருக்கு ஒரு வாகனத்தை வாங்கிக் கொடுத்திருக்காங்க. ஆனா அந்த வாகனமே அவருக்கு எமணா அமைஞ்சிருக்கு. யோசிச்சுப் பாருங்க, எங்கேயாவது ஒரு எம்.எல்.ஏ. வண்டி இல்லாம இருக்கிறாரா? இல்ல ஊர் மக்கள் தான் அவுங்க கை காசைப் போட்டு வண்டி வாங்கிக் கொடுத்திருக்காங்களா? நம்ம அரசியல் வாதிங்க எல்லாம் மக்களோட பணத்தை சுருட்டாம இருந்தாலே போதும். இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில, இப்படி ஒரு எம்.எல்.ஏ.வை பார்க்குறது பெரிய அதிசியம் தான். இன்னொன்னும் அவரைப் பற்றி சொல்லணும், நிறைய சட்டமன்ற/மக்களவை உறுப்பினர்கள் எல்லாம் மக்களுக்கு சேவை செய்யணும் அப்படின்னு நினைச்சு அங்க போகாம, ஏதோ பொழுது போகுறதுக்கு தான் சட்டமன்றத்துக்கோ/மக்களவைக்கோ போறாங்க. ஏன்னா, அவுங்க எல்லாம் எந்த ஒரு கேள்வியும் கேட்காம, பதிலும் சொல்லாம பேசாம போயிட்டு வராங்க. இன்னும் சில பேரு தூங்கறதுக்காகவே போறாங்க. ஆனா, இந்த முத்துக்குமரன் அப்படி எல்லாம் இல்லாம சட்ட மன்றத்துல அதிகமா கேள்விகள் கேட்டவர் அப்படின்னு இவரை பற்றி சொல்றாங்க. அதோடு நதிகள் இணைப்பு திட்டத்துல ரொம்பவே ஆர்வம் காட்டுனவர்னு சொல்றாங்க.
சொத்துக்களை மட்டும் சேர்க்கிறதையே வேலையா பார்க்கிற அரசியல்வாதிங்க மத்தியில்,இந்த மாதிரி ஒரு நல்ல மனிதர், மேலே சொன்ன மாதிரியான அரசியல்வாதிகளுக்கு எல்லாம் ஒரு உதாரணமா திகழ்ந்தவர், இப்படி அல்ப ஆயிசுல இறந்திருக்க வேண்டாம்.
இந்த உலகத்துல உனக்கு பொழைக்கத் தெரியலைன்னு ஆண்டவனே அவரை கூப்பிட்டுக்கிட்டான் போல.  

. 

No comments:

Post a Comment